என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
புரோ கபடி லீக் - பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின
Byமாலை மலர்23 Feb 2022 7:46 PM GMT (Updated: 23 Feb 2022 7:46 PM GMT)
புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதியில் யு.பி யோதா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் தோற்றன.
பெங்களூர்:
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்சும், உ.பி. யோதா அணியும் மோதின. இதில் பாட்னா அணி 38 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் தபாங் டெல்லி அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இதில் அதிரடியாக ஆடிய டெல்லி அணி 40 -35 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதையும் படியுங்கள்...சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X