search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினோத்குமார்
    X
    வினோத்குமார்

    டோக்கியோ பாராலிம்பிக் - வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு

    டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிசில் பவினாபென்னும், உயரம் தாண்டுதலில் நிஷாத் குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
    டோக்கியோ:

    மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

    இந்தப் போட்டியின் 6-வது நாளான இன்று நடந்த டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் எப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார்  வெண்கலம் வென்றார். 

    இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு, வகைப்பாடு கண்காணிப்பு காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டிக்கான வெற்றி விழா நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×