search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைதானத்துக்குள் நுழைந்த நபர்
    X
    மைதானத்துக்குள் நுழைந்த நபர்

    3வது டெஸ்டின்போது மைதானத்துக்குள் நுழைந்து சலசலப்பு ஏற்படுத்திய நபர் - கடுப்பான அஷ்வின்

    மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும், தற்போது நடந்து வரும் 3வது போட்டியிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் சர்ச்சையாகி வருகிறது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டம் பற்றி அஷ்வின், 'ரோகித் சர்மா, புஜாரா மற்றும் கோலி ஆகியோரின் சிறப்பான திறமை இன்றைய ஆட்டத்தில் வெளிப்பட்டது. ஜார்வோ நீங்கள் செய்வதை நிறுத்தங்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

    டேனியல் ஜார்விஸ் என்னும் இங்கிலாந்து நாட்டுக்காரர், இப்படி ஆட்டம் நடக்கும்போதே மைதானத்துக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும், மைதானத்துக்குள் திடீரென்று நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தினார் ஜார்விஸ். இதைத் தொடர்ந்துதான் இப்படியான செயலை ஜார்விஸ் நிறுத்த வேண்டும் என்று அஷ்வின் கூறியுள்ளார்.
    Next Story
    ×