என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பெயரில் விளையாட்டு மைதானம்
Byமாலை மலர்27 Aug 2021 1:59 PM GMT (Updated: 27 Aug 2021 1:59 PM GMT)
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புனே:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடுகிறது.
அவரை கவுரவிக்கும் வகையில் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் உள்ள ஸ்டேடியத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியத்தை. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று திறந்து வைத்தார். விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘விளையாட்டுகளை ஊக்குவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது பிரதமர் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பணியாற்றி வருகிறார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த நடைமுறைகளில் மாநில அரசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X