search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வீரர்கள்
    X
    வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வீரர்கள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்தனர்.

    திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவண் குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், முகுந்த் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார்.

    பவுண்டரிக்கு பந்தை விரட்டும் பேட்ஸ்மேன்

    நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    Next Story
    ×