என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரபேல் நடால் விலகல்
Byமாலை மலர்17 Jun 2021 1:26 PM GMT (Updated: 17 Jun 2021 1:26 PM GMT)
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார் ரபேல் நடால்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரபேல் நடால். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடாலை செம்மண் தரையில் எளிதாக யாரும் வீழ்த்திவிட முடியாது.
ஆனால் கடந்த வாரத்துடன் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபன் தொடரின் அரையிறுதியில் நடாலை ஜோகோவிச் வீழ்த்தினார். இதனால் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பிரெஞ்ச் ஓபனை தொடர்ந்து விம்பிள்டன் ஓபன் வருகிற 28-ந்தேதி தொடங்கு ஜூலை 11-ந்தேதி வரை நடக்கிற. அதன்பின் இரண்டு வாரம் இடைவெளியில் ஜூலை 23-ந்தேததி டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது உடலை புல்தரைக்கு ஏற்றவாறு மாற்றுவது எளிதானது அல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X