search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்கள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்கள்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீது விசாகப்பட்டினத்தில் சூதாட்டம் -4 பேர் சிக்கினர்

    கிளேடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் அணிகளுக்கிடையிலான போட்டி மீது சூதாட்டம் நடைபெற்றதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
    விசாகப்பட்டினம்:

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாகப்பட்டினம் பனோரமா ஹில்ஸ் பகுதியில் அதிரடிப்படை போலீசார் மற்றும் பிஎம் பாலம் காவல் நிலைய போலீசார் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.

    அப்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய இரண்டு எல்சிடி டிவிக்கள், இரண்டு லேப்டாப்கள், ஒரு டேப், 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. 

    போலீஸ் அதிகாரி ரவிக்குமார்

    கிளேடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் அணிகளுக்கிடையிலான போட்டி மீது சூதாட்டம் நடைபெற்றதாகவும், ஸ்ரீனிவாஸ் என்பவர் சூதாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியதாகவும் பிஎம் பாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார். 
    Next Story
    ×