search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்
    X
    பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்

    புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி 5வது இடத்துக்கு முன்னேறியது உ.பி.

    புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய உபி யோத்தா அணி, பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    சண்டிகர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோத்தா அணிகள் மோதின.

    தொடக்கத்தில் இருந்தே யுபி யோத்தா அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 15- 11 என்ற புள்ளிக் கணக்கில் உபி யோத்தா முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் அரியானா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தாலும் அவர்களால் உபி யோத்தா அணியினருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், உபி யோத்தா அணியினர் 37- 30 என்ற புள்ளிக் கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி தோற்றது.

    18-வது ஆட்டத்தில் ஆடிய உபி யோத்தா அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 18-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 50-21 என்ற கணக்கில் சுருட்டியது குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி.
    Next Story
    ×