என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் பலமாக இடித்த விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
Byமாலை மலர்23 Sep 2019 2:08 PM GMT (Updated: 23 Sep 2019 2:08 PM GMT)
ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் வேண்டுமென்றே இடித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் விராட் கோலி களம் இறங்கினார். வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி ரன்கள் அடிக்க திணறினார்.
அதேசமயத்தில் ரோகித் சர்மாவை வீழ்த்தி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஓடும்போது பந்து வீசிய பின் ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஒரு இடி இடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹென்ரிக்ஸ் எளிதாக எடுத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு சென்றுவிட்டார். அப்போது போட்டியை பார்த்துக் கொண்ட ரசிகர்கள், விராட் கோலிக்கு எப்படியும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறிக் கொண்டனர்.
அதன்படியே ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில் ரோகித் சர்மாவை வீழ்த்தி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஓடும்போது பந்து வீசிய பின் ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஒரு இடி இடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹென்ரிக்ஸ் எளிதாக எடுத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு சென்றுவிட்டார். அப்போது போட்டியை பார்த்துக் கொண்ட ரசிகர்கள், விராட் கோலிக்கு எப்படியும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறிக் கொண்டனர்.
அதன்படியே ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X