என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா
Byமாலை மலர்22 Sep 2019 2:02 AM GMT (Updated: 22 Sep 2019 2:02 AM GMT)
ஜப்பானில் நடைபெற்று வரும் பான்பசிபிக் ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டிக்கு அந்நாட்டு வீராங்கனை நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.
ஒசாகா:
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா முதலில் நடைபெற்ற கால் இறுதியில் கஜகஸ்தானின் யுலியா பதிண்ட்செவாவுடன் மோதினார். இதில் நவாமி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில், நவாமி ஒசாகா பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நேற்று ஒரே நாளில் ஜப்பானின் நவோமி ஒசாகா இரட்டை வெற்றி பெற்றார்.
இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா, ரஷியாவின் பாவ்லிசென்கோவா மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையுடன் 470 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X