என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்தார் வினேஷ் போகத்
Byமாலை மலர்18 Sep 2019 10:52 AM GMT (Updated: 18 Sep 2019 10:52 AM GMT)
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் ரீபேக்கேஜ் சுற்றில் இரண்டு வெற்றிகள் பெற்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் வினேஷ் போகத்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் வினேஷ் போகத். 25 வயதாகும் இவர் கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த மயு முகைடாவிடம் 0-7 எனத் தோல்வியடைந்தார் வினேஷ் போகத். மயு முகைடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் ரீபேக்கேஜ் சுற்று மூலம் வெண்கல பதக்கத்தை வெல்ல போட்டியிடும் வாய்ப்பு வினேஷ் போகத்துக்கு கிடைத்தது.
ரீபேக்கேஜ் சுற்றில் முதல் ரவுண்டில் உக்ரைனைச் சேர்ந்த யுலியா கல்வாட்சியை 5-0 என வீழ்த்தினார். 2-வது ரவுண்டில் சாரா ஹில்டேபிரான்ட்-ஐ 8-2 என வீழ்த்தினார். இதன் மூலம் வெண்கல பதக்கத்திற்கு சுற்றுக்கு முன்னேறியதுடன், அடுத்த ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். கீரிஸ் நாட்டைச் சேர்ந்த மரியா பிரேவோலாரகியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் கிடைக்கும்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த மயு முகைடாவிடம் 0-7 எனத் தோல்வியடைந்தார் வினேஷ் போகத். மயு முகைடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் ரீபேக்கேஜ் சுற்று மூலம் வெண்கல பதக்கத்தை வெல்ல போட்டியிடும் வாய்ப்பு வினேஷ் போகத்துக்கு கிடைத்தது.
ரீபேக்கேஜ் சுற்றில் முதல் ரவுண்டில் உக்ரைனைச் சேர்ந்த யுலியா கல்வாட்சியை 5-0 என வீழ்த்தினார். 2-வது ரவுண்டில் சாரா ஹில்டேபிரான்ட்-ஐ 8-2 என வீழ்த்தினார். இதன் மூலம் வெண்கல பதக்கத்திற்கு சுற்றுக்கு முன்னேறியதுடன், அடுத்த ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். கீரிஸ் நாட்டைச் சேர்ந்த மரியா பிரேவோலாரகியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X