search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிஷ்பா உல் ஹக்
    X
    மிஷ்பா உல் ஹக்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது -மிஷ்பா அதிரடி

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி உணவாக கிடையாது என புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மிஷ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வாளராக மிஷ்ரா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உள்ளூர் பாக். கிரிக்கெட் வீரர்களின் உணவுமுறையில் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

    இங்கிலாந்தில் உலக கோப்பை நடந்தபோது, பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்து பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக இப்போதில் இருந்தே வீரர்களுக்கு உணவு முறையில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிகிறது.

    இதையடுத்து தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு பிரியாணி, எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி தேசிய அணியும் விரைவில் கடைபிடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    பார்பிகியூ, பழங்கள் அதிகமாக சாப்பிட வீரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வீரர்கள் சரியான உணவு முறையை கடைப்பிடிக்காமல், எண்ணெய், ஜங் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இவர்களது உணவுமுறையை ஒழுங்குப்படுத்த லாக் புக் ஒன்று பராமரிக்கப்பட உள்ளது. அதனை கடைப்பிடிக்காதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என மிஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்’ என கூறியுள்ளனர்.

    Next Story
    ×