search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா தென்ஆப்பிரிக்கா முதல் டி20 கிரிக்கெட்
    X
    இந்தியா தென்ஆப்பிரிக்கா முதல் டி20 கிரிக்கெட்

    கனமழையால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது

    தரம்சாலாவில் நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கனமழையால் கைவிடப்பட்டது
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் சரியாக 6.30 மணிக்கு சுண்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தரம்சாலாவில் மழை பெய்து வந்ததால் டாஸ்  சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்  நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர். போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
    Next Story
    ×