என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு பிடித்தமானவர் சவாலுக்காக காத்திருக்கிறார்: ரிஷப் பந்த்துக்கு கவுதம் காம்பிர் எச்சரிக்கை
Byமாலை மலர்15 Sep 2019 12:12 PM GMT (Updated: 16 Sep 2019 1:21 PM GMT)
எனக்கு பிடித்தமானவர் சவாலுக்காக காத்திருக்கிறார் என்று ரிஷப் பந்துக்கு கவுதம் காம்பிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிக்கு ரிஷப் பந்த்-ஐ விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டி20 போட்டியில் தொடர்ந்து சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 0, 4 மற்றும் 65 (அவுட்இல்லை) ரன்களே அடித்தார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தரம்சாலாவில் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் ரிஷப் பந்த் மோசமாக விளையாடினால் விமர்சனம் எழுப்பப்படும். இந்நிலையில், எனக்கு பிடித்தமானவர் (சஞ்சு சாம்சன்) உங்களுக்கு போட்டியாக உள்ளார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் எப்போதும் சிறப்பாக உற்சாகத்துடன் விளையாடக் கூடியவர். ஆனால், எனக்கு பிடித்தவராக சஞ்சு சாம்சன் அவருக்கு போட்டியான பின்னால் நின்று கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சாம்சன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் சவாலாக திகழ்ந்து வருகிறார்’’ என்றார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டி20 போட்டியில் தொடர்ந்து சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 0, 4 மற்றும் 65 (அவுட்இல்லை) ரன்களே அடித்தார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தரம்சாலாவில் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் ரிஷப் பந்த் மோசமாக விளையாடினால் விமர்சனம் எழுப்பப்படும். இந்நிலையில், எனக்கு பிடித்தமானவர் (சஞ்சு சாம்சன்) உங்களுக்கு போட்டியாக உள்ளார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் எப்போதும் சிறப்பாக உற்சாகத்துடன் விளையாடக் கூடியவர். ஆனால், எனக்கு பிடித்தவராக சஞ்சு சாம்சன் அவருக்கு போட்டியான பின்னால் நின்று கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சாம்சன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் சவாலாக திகழ்ந்து வருகிறார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X