search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான் கில்
    X
    ஷுப்மான் கில்

    வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்: ஷுப்மான் கில்

    இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள ஷுப்மான் கில், வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார்.

    உள்ளூர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடியதன் காரணமாக ஷுப்மான் கில்லுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல்  டெஸ்டில் விளையாடி கொண்டிருந்தேன். நான் வீரர்கள் அறைக்கு வரும்போது என்னுடைய சக அணி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வான செய்தியை தெரிவித்தார்கள். நான் என்னுடைய போனை உடனடியாக செக் செய்தேன்.

    போன் மிஸ்டு கால்கள், மெசேஜ்-களாலும் நிரம்பி கிடந்தது. தற்போது மகிழ்ச்சியில் உள்ளேன். விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நாங்கள் சிறந்த அணி. விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×