என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊடகங்கள் சில வீரர்களை மட்டுமே மிகைப்படுத்தி காட்டுகின்றன: ரபாடா
Byமாலை மலர்8 Sep 2019 1:52 PM GMT (Updated: 8 Sep 2019 1:52 PM GMT)
ஊடகங்கள் சில வீரர்களை மட்டுமே மிகைப்படுத்தி காட்டுகின்றன என தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. 15-ந்தேதி டி20 தொடர் தொடங்கும் நிலையில், இந்திய தொடர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்த ரபாடா, பும்ரா மற்றும் ஆர்சர் போன்ற பந்து வீச்சாளர்களின் வளர்ச்சியால் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரபாடா கூறுகையில் ‘‘பும்ரா, ஆர்சர் போன்ற பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் சிறந்த பவுலர்கள். எனினும், மீடியாக்கள் குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே மிகைப்படுத்துகின்றன.
நான் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆர்சர் இயற்கையான திறமையை கொண்டவர். பும்ரா அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இவர்களால் எனது ஆட்டம் எனக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஒரு பந்து வீச்சாளர் எப்போதுமே நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க முடியாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
மீண்டும் இந்தியாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து ரபாடா கூறுகையில் ‘‘பும்ரா, ஆர்சர் போன்ற பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் சிறந்த பவுலர்கள். எனினும், மீடியாக்கள் குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே மிகைப்படுத்துகின்றன.
நான் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆர்சர் இயற்கையான திறமையை கொண்டவர். பும்ரா அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இவர்களால் எனது ஆட்டம் எனக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஒரு பந்து வீச்சாளர் எப்போதுமே நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்க முடியாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
மீண்டும் இந்தியாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையே தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X