என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் டோனியை ஆலோசகராகவே கருதுகிறேன்: ரிஷப் பந்த்
Byமாலை மலர்8 Sep 2019 1:25 PM GMT (Updated: 8 Sep 2019 1:25 PM GMT)
எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு வரும் நிலையில், நான் அவரை ஆலோசகராகவே கருதுகிறேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்-ஐ எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நான் டோனியை ஆலோசகராக பார்க்கிறேன் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘சில நேரங்களில் டோனியுடன் ஒப்பிடுவது குறித்து நான் யோசனை செய்தது உண்டு. ஆனால், அது மிகவும் கஷ்டமானது. நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரேநாளில் அவருடைய அனைத்தை யுக்திகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.
அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் அவரை ஆலோசகராகவே கருதுகிறேன். பல விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். நெருக்கடியான நிலையில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும், பேட்டிங் செய்ய செல்வதற்கு முன் மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் போன்றவை குறித்து அவர் எனக்கு சொல்லித் தந்துள்ளார்.
எனக்கு 21 வயதுதான் ஆகிறது. அப்போது டோனியின் இடத்தை நிரப்புவது குறித்து யோசித்தால், பின்னர் அது எனக்கு சிக்கலாக முடிந்து விடும். என்னுடைய திறமைக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னை சுற்றியுள்ள ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும், குறிப்பாக சீனியர் வீரர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.
இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘சில நேரங்களில் டோனியுடன் ஒப்பிடுவது குறித்து நான் யோசனை செய்தது உண்டு. ஆனால், அது மிகவும் கஷ்டமானது. நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரேநாளில் அவருடைய அனைத்தை யுக்திகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.
அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் அவரை ஆலோசகராகவே கருதுகிறேன். பல விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளார். நெருக்கடியான நிலையில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும், பேட்டிங் செய்ய செல்வதற்கு முன் மனநிலையை எப்படி வைத்திருக்க வேண்டும் போன்றவை குறித்து அவர் எனக்கு சொல்லித் தந்துள்ளார்.
எனக்கு 21 வயதுதான் ஆகிறது. அப்போது டோனியின் இடத்தை நிரப்புவது குறித்து யோசித்தால், பின்னர் அது எனக்கு சிக்கலாக முடிந்து விடும். என்னுடைய திறமைக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னை சுற்றியுள்ள ஒவ்வொரு வீரர்களிடம் இருந்தும், குறிப்பாக சீனியர் வீரர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X