search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக்
    X
    தினேஷ் கார்த்திக்

    பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்

    தினேஷ் கார்த்திக்கிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
    இந்திய அணிக்காக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுதான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியின் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.

    இரண்டு அணிகளுக்கும் பிராண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் போட்டியை பார்த்தார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு பிரிமீயர் லீக் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ.

    இந்நிலையில் பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘பிசிசிஐ அனுமதியின்றி சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×