என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்
Byமாலை மலர்8 Sep 2019 10:11 AM GMT (Updated: 8 Sep 2019 10:11 AM GMT)
தினேஷ் கார்த்திக்கிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுதான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியின் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.
இரண்டு அணிகளுக்கும் பிராண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் போட்டியை பார்த்தார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு பிரிமீயர் லீக் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ.
இந்நிலையில் பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘பிசிசிஐ அனுமதியின்றி சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் பிராண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் போட்டியை பார்த்தார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு பிரிமீயர் லீக் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ.
இந்நிலையில் பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘பிசிசிஐ அனுமதியின்றி சென்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X