என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்6 Sep 2019 5:27 AM GMT (Updated: 6 Sep 2019 5:27 AM GMT)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிட நேரம் நீடித்தது.
3 முறை சாம்பியனான ரபேல் நடால் 8-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ரபேல் நடால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
மற்றொரு காலிறுதியில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான மான்பில்சை (பிரான்ஸ்) போராடி சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரேட்டினி அரையிறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அரையிறுதியில் நடால்- பெரேட்டினி ஆகியோர் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச்சை (குரோஷியா) விரட்டியடித்து முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிட நேரம் நீடித்தது.
3 முறை சாம்பியனான ரபேல் நடால் 8-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ரபேல் நடால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
மற்றொரு காலிறுதியில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான மான்பில்சை (பிரான்ஸ்) போராடி சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெரேட்டினி அரையிறுதியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அரையிறுதியில் நடால்- பெரேட்டினி ஆகியோர் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச்சை (குரோஷியா) விரட்டியடித்து முதல்முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X