search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    அஸ்வினை வெளியேற்றுகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவரால் இரண்டு முறையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    அஸ்வின்

    இதனால் 2020 சீசனில் அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது, கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்கலாம் எனத் தெரிகிறது. அஸ்வினை வாங்க டெல்லி அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அஸ்வினை வாங்கும் போட்டியில் களம் இறங்கலாம் எனக்கூறப்படுகிறது.
    Next Story
    ×