என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் கால் இறுதிக்கு தகுதி
Byமாலை மலர்2 Sep 2019 9:59 AM GMT (Updated: 2 Sep 2019 9:59 AM GMT)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் 4-வது சுற்றில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர் கொண்டார்.
இதில் பெடரர் 6-2, 6-2, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் டிமிட் ரோவை (பல்கேரியா) சந்திக்கிறார்.
டிமிட்ரோவ் 4-வது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற கணக்கில் மினாவூரை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார்.
வாவ்ரிங்கா கால் இறுதியில் 5-ம் நிலை வீரரான மெட்வதேவை (ரஷியா) சந்திக்கிறார்.
23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 8-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 4-வது ரவுண்டில் பெட்ரோ மேட்ரிக்கை (செக்குடியரசு) எதிர்கொண்டார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்லேபெர்டி (ஆஸ்திரேலியா) 3-வது வரிசையில் உள்ள பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.
சீன வீராங்கனை வாங் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஹோண்டா ஆகியோர் அவர்களை முறையே வீழ்த்தினர்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் 4-வது சுற்றில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர் கொண்டார்.
இதில் பெடரர் 6-2, 6-2, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் டிமிட் ரோவை (பல்கேரியா) சந்திக்கிறார்.
டிமிட்ரோவ் 4-வது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற கணக்கில் மினாவூரை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார்.
வாவ்ரிங்கா கால் இறுதியில் 5-ம் நிலை வீரரான மெட்வதேவை (ரஷியா) சந்திக்கிறார்.
23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 8-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 4-வது ரவுண்டில் பெட்ரோ மேட்ரிக்கை (செக்குடியரசு) எதிர்கொண்டார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்லேபெர்டி (ஆஸ்திரேலியா) 3-வது வரிசையில் உள்ள பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.
சீன வீராங்கனை வாங் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஹோண்டா ஆகியோர் அவர்களை முறையே வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X