search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் மும்பை வீரர்கள்
    X
    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் மும்பை வீரர்கள்

    புரோ கபடி - ஜெய்ப்பூரை பந்தாடியது மும்பை

    பெங்களூருவில் நேற்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பந்தாடி வீழ்த்தியது யு மும்பா அணி.
    பெங்களூரு:

    புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே மும்பை அணி சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தது. ஜெய்ப்பூர் அணியும் அவ்வப்போது பாயிண்ட்களை எடுத்து வந்தது.

    முடிவில், யு மும்பா அணி 47 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியை 32-23 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது.
    Next Story
    ×