என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறுவோம்: ஹாக்கி வீரர் பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை
Byமாலை மலர்30 Aug 2019 11:39 AM GMT (Updated: 30 Aug 2019 11:39 AM GMT)
இந்திய ஹாக்கி அணி உறுதியாக டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறும் என அனுபவ வீரர் பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு அணிகளும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்திய ஹாக்கி அணி தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்யும் என அனுபவ கோல் கீப்பரான பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்திய அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஒலிம்பிக் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆட்டம், சீனியர் வீரர்கள் இல்லாவிடிலும் ரிசர்வ் வீரர்கள் வலிமையாக உள்ளனர் என்பதை காட்டியது.
தற்போதைய நிலையில் அணி சரியான பேலன்ஸ்-ஐ கொண்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
அந்த வகையில் இந்திய ஹாக்கி அணி தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்யும் என அனுபவ கோல் கீப்பரான பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்திய அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஒலிம்பிக் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆட்டம், சீனியர் வீரர்கள் இல்லாவிடிலும் ரிசர்வ் வீரர்கள் வலிமையாக உள்ளனர் என்பதை காட்டியது.
தற்போதைய நிலையில் அணி சரியான பேலன்ஸ்-ஐ கொண்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X