search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீஜேஷ்
    X
    ஸ்ரீஜேஷ்

    டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறுவோம்: ஹாக்கி வீரர் பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை

    இந்திய ஹாக்கி அணி உறுதியாக டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறும் என அனுபவ வீரர் பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஜப்பானில் உள்ள டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு அணிகளும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் இந்திய ஹாக்கி அணி தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்யும் என அனுபவ கோல் கீப்பரான பிஆர் ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்திய அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஒலிம்பிக் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆட்டம், சீனியர் வீரர்கள் இல்லாவிடிலும் ரிசர்வ் வீரர்கள் வலிமையாக உள்ளனர் என்பதை காட்டியது.

    தற்போதைய நிலையில் அணி சரியான பேலன்ஸ்-ஐ கொண்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் தொடருக்கான இடத்தை உறுதி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×