என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குதான்.. -ராயுடு புகழாரம்
Byமாலை மலர்30 Aug 2019 7:13 AM GMT (Updated: 30 Aug 2019 7:13 AM GMT)
ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பதி ராயுடு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்ததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் காரணம் என ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தி அடைந்தார். இதன் விளைவாக ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பதி ராயுடு அறிவித்தார். இதனை பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் அனுப்பியுள்ள மெயிலில், ‘ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறுகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தி அடைந்தார். இதன் விளைவாக ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பதி ராயுடு அறிவித்தார். இதனை பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஒரு நாள் தொடரில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு வந்த அம்பதி ராயுடு, உலக கோப்பையில் கலந்துக் கொள்ள 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தும், அதில் தேர்வாகவில்லை என்ற ஏமாற்றத்தினாலேயே ஓய்வு முடிவை எடுத்ததாக கூறினார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு அவர் அனுப்பியுள்ள மெயிலில், ‘ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெறுகிறேன். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.
வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் ஐதராபாத் அணியில் இணைய தயாராகிவிட்டேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் நன்றி. நான் மனம் மாறியதற்கான அனைத்து பெருமையும் அந்த அணியைதான் சேரும்.
எனக்கு ஆதரவாக இருந்த, என்னை மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப உணர்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், நோயல் டேவிட் ஆகியோருக்கு என் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X