என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டெஸ்டில் சகா விளையாட தகுதியானவர்: கிர்மானி சொல்கிறார்
Byமாலை மலர்27 Aug 2019 2:55 PM GMT (Updated: 27 Aug 2019 2:55 PM GMT)
ரிஷப் பந்த் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் 2-வது டெஸ்டில் விளையாட சகா தகுதியானவர் என்று கிர்மானி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சகாவுக்கு காயம் ஏற்பட்டதால், ரிஷப் பந்த் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரிஷப் பந்த்-ஐ மூன்று வகை கிரிக்கெட்டிலும் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒட்டுமொத்த போட்டிக்கும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இரண்டு போட்டிக்கான டெஸ்ட் அணியில் சகா மாற்று வீரராக உள்ளார்.
இந்நிலையில் 2-வது போட்டியில் சகா விக்கெட் கீப்பராக பணியாற்ற தகுதியானவர் என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார்.
துரதிருஷ்டவசமாக சகா காயத்தால் ஒரு வருடத்திற்கு மேல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை அணியில் வைத்திருப்பதின் பயன் என்ன?’’என்றார்.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒட்டுமொத்த போட்டிக்கும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இரண்டு போட்டிக்கான டெஸ்ட் அணியில் சகா மாற்று வீரராக உள்ளார்.
இந்நிலையில் 2-வது போட்டியில் சகா விக்கெட் கீப்பராக பணியாற்ற தகுதியானவர் என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிர்மானி கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளார். அவர் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அவர் இன்னும் அதிக அளவில் கற்றுக் கொள்ள வேண்டும். விக்கெட் கீப்பர் பணி என்பது மிகவும் கடினமான பணி. ஒவ்வொருவரும் கையுறை அணிந்து கொண்டு கீப்பராக பணியாற்றிட முடியாது’’ என்றார்.
துரதிருஷ்டவசமாக சகா காயத்தால் ஒரு வருடத்திற்கு மேல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை அணியில் வைத்திருப்பதின் பயன் என்ன?’’என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X