search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாதன் லயன் நடுவரிடம் அப்பீல் செய்த காட்சி
    X
    நாதன் லயன் நடுவரிடம் அப்பீல் செய்த காட்சி

    ஆஸ்திரேலியாவுக்கு எமனாக இருந்த நடுவர்

    ஆஷஸ் தொடரின் 3-வது போட்டியில் கடைசி நேரத்தில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பினால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பறிபோனது.
    இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்த போது, ஜாக் லீச்சுக்கு மிக எளிதான ரன்-அவுட் வாய்ப்பை நாதன் லயன் தவற விட்டார். அத்துடன் அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்த போது பந்து பேட்டில் படாமல் அவரது காலுறையை தாக்கியது. உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் விரலை உயர்த்தவில்லை.

    பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்த காட்சி


    டி.வி. ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை துல்லியமாக தாக்குவது தெரிந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா வசம் டி.ஆர்.எஸ். வாய்ப்பு இல்லாததால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியவில்லை. நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும்.
    Next Story
    ×