என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அஸ்வினை சேர்க்காததற்கு இதுதான் காரணம் -ரஹானே விளக்கம்
Byமாலை மலர்23 Aug 2019 7:34 AM GMT (Updated: 23 Aug 2019 7:34 AM GMT)
இந்திய அணி ஆடும் லெவன்சில் அஸ்வின் இடம் பெறாததற்கான காரணம் என்ன என்பதை இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது.
இதில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ் என யாரும் இடம் பெறவில்லை. ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பிடித்தனர்.
அவர் இல்லாததற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் வருத்தம் தெரிவித்திருந்தார். அஸ்வின் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ன என்பதை துணை கேப்டன் ரஹானே தெரிவித்தார்.
இதில் அவர் கூறுகையில், ‘அஸ்வின், ரோகித் போன்ற அனுபவ வீரர்கள் ஆடும் லெவன்சில் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்றுதான். ஆனால், அணி மிகச்சிறப்பான காம்பினேஷன்களைதான் தேர்வு செய்யும். பிட்சின் தன்மை வைத்தே அணி நிர்வாகம் வீரரை தேர்வு செய்யும்.
இந்த பிட்சில் அஸ்வினை விட ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றுதான் அவரை அணி தேர்வு செய்திருக்கிறது. மேலும், ஆறாவதாக ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதால் அதில் சிறப்பாக இருக்கும் விஹாரியை தேர்வு செய்துள்ளனர். பயிற்சியாளர் மட்டுமின்றி கேப்டனும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என விளக்கம் கூறியுள்ளார்.
இதில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, அஸ்வின், குல்தீப் யாதவ் என யாரும் இடம் பெறவில்லை. ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பிடித்தனர்.
இந்த தொடரில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், கடந்த முறை நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலுமே அசத்தினார்.
அவர் இல்லாததற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் வருத்தம் தெரிவித்திருந்தார். அஸ்வின் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ன என்பதை துணை கேப்டன் ரஹானே தெரிவித்தார்.
இதில் அவர் கூறுகையில், ‘அஸ்வின், ரோகித் போன்ற அனுபவ வீரர்கள் ஆடும் லெவன்சில் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்றுதான். ஆனால், அணி மிகச்சிறப்பான காம்பினேஷன்களைதான் தேர்வு செய்யும். பிட்சின் தன்மை வைத்தே அணி நிர்வாகம் வீரரை தேர்வு செய்யும்.
இந்த பிட்சில் அஸ்வினை விட ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றுதான் அவரை அணி தேர்வு செய்திருக்கிறது. மேலும், ஆறாவதாக ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதால் அதில் சிறப்பாக இருக்கும் விஹாரியை தேர்வு செய்துள்ளனர். பயிற்சியாளர் மட்டுமின்றி கேப்டனும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என விளக்கம் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X