என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘பார்ட் டைம்’ பவுலரான கேன் வில்லியம்சனுக்கு வந்த சோதனை: சந்தேகம் இருப்பதாக புகார்
Byமாலை மலர்20 Aug 2019 9:14 AM GMT (Updated: 20 Aug 2019 9:14 AM GMT)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது நியூசிலாந்து கேப்டனான கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசினார். அவர் நீண்ட நேரம் எதிரணியின் விக்கெட் விழவில்லை என்றால், பகுதி நேரமாக ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். அப்படித்தான் மூன்று ஓவர்கள் வீசினார். அப்போது ஐசிசி விதிமுறைக்கு முரண்பட்டு பந்து வீசியதாக புகார் கூறப்பட்டது.
போட்டி அதிகாரிகள் இதுகுறித்து நியூசிலாந்து அணி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். இன்னும் 14 நாட்களுக்குள் கேன் வில்லியம்சன் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்பட்டு சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தடைக்குள்ளாவார் என்று ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.
அதேபோல் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயாவும் முரண்பாடாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆறு விக்கெட் வீழ்த்தினார். முன்னணி பந்து வீச்சாளர் என்பதால் இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
போட்டி அதிகாரிகள் இதுகுறித்து நியூசிலாந்து அணி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். இன்னும் 14 நாட்களுக்குள் கேன் வில்லியம்சன் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்பட்டு சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தடைக்குள்ளாவார் என்று ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.
அதேபோல் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயாவும் முரண்பாடாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆறு விக்கெட் வீழ்த்தினார். முன்னணி பந்து வீச்சாளர் என்பதால் இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X