search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எஸ்.டோனி
    X
    எம்.எஸ்.டோனி

    ராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்

    காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.
    புது டெல்லி:

    நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. 

    இதற்கிடையே, டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

    இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னலாக இருக்கு எம்.எஸ்.டோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற எம்.எஸ்.டோனி ராணுவ பயிற்சியை முடித்தார். காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று பணிகளை ஆற்றினார். இதையடுத்து அவர் இன்று தலைநகர் டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×