என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்
Byமாலை மலர்17 Aug 2019 12:38 AM GMT (Updated: 17 Aug 2019 12:38 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்துள்ளது.
லண்டன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்னில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். பான்கிராப்ட் 13 ரன்னிலும், கவாஜா 36 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும் வெளியேறினர். அந்த அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் சுமித் (13 ரன்), மேத்யூ வேட் (0) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X