என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிராவிட் விவகாரத்தில் இரட்டை ஆதாய பிரச்சினை இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Byமாலை மலர்14 Aug 2019 5:51 AM GMT (Updated: 14 Aug 2019 7:30 AM GMT)
டிராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகித்ததால் இந்த நியமனத்தில் இரட்டை ஆதாயம் முரண்பாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார். டிராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டிராவிட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பதவி வகித்ததால் இந்த நியமனத்தில் இரட்டை ஆதாயம் முரண்பாடு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் விளக்கம் கேட்டு டிராவிட்டுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார். டிராவிட் நன்னடத்தை அதிகாரிக்கு பதில் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பின்னர் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ரவி தோஜ்டே அளித்த பேட்டியில், ‘டிராவிட் நியமனம் விஷயத்தில் இரட்டை ஆதாயம் பிரச்சினை எதுவும் இல்லை. அவரது நியமனத்துக்கு நிர்வாக கமிட்டி அனுமதி அளித்து விட்டது. நன்னடத்தை அதிகாரி இரட்டை ஆதாய பிரச்சினை இருப்பதாக கருதினால் அதற்கு நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளரை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தேர்வு செய்யும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தன்னிச்சையான அமைப்பு. அவர்கள் வழக்கமான விதிமுறையின்படி பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X