என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை பயிற்சியாளர் பதவி: தேர்வு பட்டியலில் ரவிசாஸ்திரி உள்பட 6 பேர்
Byமாலை மலர்13 Aug 2019 9:47 AM GMT (Updated: 13 Aug 2019 9:47 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 6 பேரை தேர்வு செய்துள்ளனர் ஆலோசனைக்குழு.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவி காலம் கடந்த உலகக்கோப்பை போட்டியோடு முடிந்தது.
இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் கிரிக்கெட் வாரியம் இறங்கியது. பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.
இக்குழு பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது. இந்தியாவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தகுதி அடிப்படையில் 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை பயிற்சியாளர் தேர்வு குழு வெளியிட்டுள்ளது.
இதில் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் வீரர் ராபின்சிங், இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகிய 3 இந்தியர்களும், நியூசிலாந்து அணி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், இலங்கை அணி முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி (ஆஸ்திரேலியா), ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 3 வெளி நாட்டினரும் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுடன் கபில்தேவ் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் நேர்காணல் நடத்துகிறார்கள்.
இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் கிரிக்கெட் வாரியம் இறங்கியது. பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய ஆலோசனை குழுவை அமைத்துள்ளது.
இக்குழு பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது. இந்தியாவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தகுதி அடிப்படையில் 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை பயிற்சியாளர் தேர்வு குழு வெளியிட்டுள்ளது.
இதில் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் வீரர் ராபின்சிங், இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் ஆகிய 3 இந்தியர்களும், நியூசிலாந்து அணி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், இலங்கை அணி முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி (ஆஸ்திரேலியா), ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 3 வெளி நாட்டினரும் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுடன் கபில்தேவ் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் நேர்காணல் நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X