என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி - பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது உ.பி.யோத்தா
Byமாலை மலர்12 Aug 2019 9:38 PM GMT (Updated: 12 Aug 2019 9:38 PM GMT)
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டியில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.
ஆமதாபாத்:
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 29-29 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி முதலில் 5 புள்ளிகள் முன்னிலை வகித்தாலும் அதனை நீண்ட நேரம் தக்க வைக்க முடியவில்லை. உ.பி.யோத்தா அணி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து பெங்களூரு புல்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. பிற்பாதியில் உ.பி.யோத்தா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன் மீண்டும் ஒரு முறை பெங்களூரு புல்சை ‘ஆல்-அவுட்’ செய்தது. முடிவில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 29-29 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி முதலில் 5 புள்ளிகள் முன்னிலை வகித்தாலும் அதனை நீண்ட நேரம் தக்க வைக்க முடியவில்லை. உ.பி.யோத்தா அணி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து பெங்களூரு புல்ஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தன. பிற்பாதியில் உ.பி.யோத்தா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன் மீண்டும் ஒரு முறை பெங்களூரு புல்சை ‘ஆல்-அவுட்’ செய்தது. முடிவில் உ.பி.யோத்தா 35-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை சாய்த்தது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X