search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் பெங்கால் வீரர்கள்
    X
    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் பெங்கால் வீரர்கள்

    புரோ கபடி - மும்பையை வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி

    பாட்னாவில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்கால் அணி.
    பாட்னா:

    புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிராக பெங்கால் அணி பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ், உபி யோத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் 41 - 20 என்ற புள்ளிக் கணக்கில் உபி யோத்தா அணியை சாய்த்தது.
    Next Story
    ×