search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்
    X
    டிஎன்பிஎல் கிரிக்கெட்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி அணிகள் இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடக்கும் 24-வது ‘லீக்‘ ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல்:

    4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 24-வது ‘லீக்‘ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில்இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

    இதில் சுப்பிரமணிய சிவா தலைமையிலான டூட்டி பேட்ரியாட்ஸ்- சாய் கிஷோர் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது. தோற்றால் அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு சிக்கலாகி விடும்.

    திருச்சி வாரியர்ஸ் அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மட்டுமே இதுவரை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அந்த அணி 6 ஆட்டத்தில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    மீதியுள்ள 3 இடத்துக்கு முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (தலா 8 புள்ளிகள்) காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ் (தலா 6 புள்ளிகள்) டூட்டி பேட்ரியாட்ஸ் (4 புள்ளி) ஆகிய 5 அணிகள் போட்டியில் உள்ளன.

    காரைக்குடி காளை, திருச்சி வாரியர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

    Next Story
    ×