search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் டிராகன்ஸ்
    X
    திண்டுக்கல் டிராகன்ஸ்

    திண்டுக்கல் டிராகன்ஸ் 6-வது வெற்றி ஆர்வம்: காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நத்தம்:

    4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அந்த அணியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சதுர்வேத், விவேக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் அஸ்வின் சிலம்பரசன், கவுசிக் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். திண்டுக்கல் அணி அனைத்து துறையிலும் அசத்தி வருவ தால் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் 5 ஆட்டததில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை காஞ்சி வீரன்ஸ் பிரகாசப்படுத்தி கொள்ளும். அந்த அணியில் பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், சதீஷ், விஷால் வைத்யா, தீபன் லிங்கேஷ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    பலம் வாய்ந்த திண்டுக்கல்லுக்கு எதிராக காஞ்சி வீரன்ஸ் அணி முழுதிறமையை வெளிப்படுத்துவது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×