என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் டிராகன்ஸ் 6-வது வெற்றி ஆர்வம்: காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
நத்தம்:
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடக்கும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அந்த அணியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சதுர்வேத், விவேக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் அஸ்வின் சிலம்பரசன், கவுசிக் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். திண்டுக்கல் அணி அனைத்து துறையிலும் அசத்தி வருவ தால் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் 5 ஆட்டததில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை காஞ்சி வீரன்ஸ் பிரகாசப்படுத்தி கொள்ளும். அந்த அணியில் பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், சதீஷ், விஷால் வைத்யா, தீபன் லிங்கேஷ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
பலம் வாய்ந்த திண்டுக்கல்லுக்கு எதிராக காஞ்சி வீரன்ஸ் அணி முழுதிறமையை வெளிப்படுத்துவது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்