search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் களமிறங்கிய பெங்களூரு புல்ஸ் வீரர்
    X
    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் களமிறங்கிய பெங்களூரு புல்ஸ் வீரர்

    புரோ கபடி - பெங்காலை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு

    புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு புல்ஸ் அணி.
    பாட்னா:

    புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பாட்னாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை எடுத்து வந்ததால் பலமுறை சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தொடர்ந்து புள்ளிகள் எடுத்தன.

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணியை 43-42 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு புல்ஸ் அணி.

    மற்றொரு ஆட்டத்தில், பாட்னா பைரட்ஸ் அணியை 34 -21 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×