search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி ரிஷப் பந்த்
    X
    விராட் கோலி ரிஷப் பந்த்

    வெஸ்ட் இண்டீஸ் தொடர் ரிஷப் பந்துக்கு சிறப்பான வாய்ப்பு: விராட் கோலி

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக பணிபுரிய இருக்கும் ரிஷப் பந்துக்கு இந்தத் தொடர் ஒட்டுமொத்த ஆட்டத்திறனையும் வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. டோனி ராணுவத்திற்கு சென்றுள்ளதால் ரிஷப் பந்த் முழுத் தொடர் ஒன்று முதன்முறையாக விக்கெட் கீப்பராக செயல்பட இருக்கிறது.

    அவரது ஒட்டுமொத்த ஆட்டத்திறனையும் வெளிப்படுத்த இந்த தொடர் அருமையான வாய்ப்பு என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. அவர்கள் எந்த விதமான நெருக்கடியும் இல்லாமல் தங்களது ஒட்டுமொத்த ஆட்டத்திறனையும் வெளிப்படுத்துவதற்கான தொடர் இது.

    அவர் எப்படிப்பட்ட திறனை பெற்றிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இந்திய கிரிக்கெட்டில் அவர் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    எம்எஸ் டோனியின் அனுபவம் எப்போதுமே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஆனால் ரிஷப் பந்த் போன்ற இளைஞர்கள் அந்த பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்கள் அதை நோக்கி செல்ல வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×