search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஹரிஷ் குமார்
    X
    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஹரிஷ் குமார்

    டிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்றது.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரிமீயர் தொடரின் 19-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்களாக அந்த அணியின் ராஜூ மற்றும் கோபிநாத் களமிறங்கினர். கோபிநாத் 1 ரன்னிலும், ராஜூ 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சசிதேவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் கௌசிக் காந்தி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடிய ஹரிஷ் குமார் 20 பந்துகளில் 6 சிக்சர்கள் உள்பட 53 ரன்கள் விளாசினார். 

    இதனால் சேப்பாக் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. காஞ்சி வீரன்ஸ் தரப்பில் தாமரை கண்ணன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் தொடக்க வீரர்கள் விஷால் 10 ரன்னிலும், லிங்கேஷ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய சதிஷ் அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தார்.

    இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றி கொண்டாட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள். அணி தரப்பில் ஹரிஷ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Next Story
    ×