search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி மகிழ்ச்சியில் தூத்துக்கு வீரர்கள்.
    X
    வெற்றி மகிழ்ச்சியில் தூத்துக்கு வீரர்கள்.

    டிஎன்பிஎல்: காரைக்குடி அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் ஸ்ரீனிவாசன் 9 ரன், கமலேஷ் 2 ரன் மற்றும் அபிஷேக் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

    பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஜ கோபால், வெங்கடேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராஜ கோபால் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிவா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் அடித்தார். வெங்கடேஷ் 30 ரன்கள் எடுத்தார். இதனால் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அனிருதா 5 ரன்னிலும், சூர்ய பிரகாஷ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் தூத்துக்குடி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 
    தூத்துக்குடி வீரர் அதிசயராஜ் பந்து வீசிய காட்சி.
    இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரன், செந்தில்நாதன் மற்றும் வெங்கடேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
    Next Story
    ×