என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல்: காரைக்குடி அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி
Byமாலை மலர்1 Aug 2019 5:33 PM GMT (Updated: 1 Aug 2019 5:33 PM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் ஸ்ரீனிவாசன் 9 ரன், கமலேஷ் 2 ரன் மற்றும் அபிஷேக் 8 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஜ கோபால், வெங்கடேஷ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராஜ கோபால் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சிவா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் அடித்தார். வெங்கடேஷ் 30 ரன்கள் எடுத்தார். இதனால் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அனிருதா 5 ரன்னிலும், சூர்ய பிரகாஷ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் தூத்துக்குடி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரன், செந்தில்நாதன் மற்றும் வெங்கடேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X