என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் தொடரே இந்தியாவுக்கு எதிராகவா.... கவலையில் தென்ஆப்பிரிக்கா கேப்டன்
Byமாலை மலர்30 July 2019 9:51 AM GMT (Updated: 30 July 2019 9:51 AM GMT)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் அணியாக இந்தியாவை எதிர்கொள்வது கடினமானது என்று தென்ஆப்பிரிக்கா கேப்டன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி நேற்று அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியாகும்.
தென்ஆப்பிரிக்கா அணி அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையின் கீழ் வருகிறது. முதல் தொடரே இந்திய மண்ணில் என்பது கடினமானது என்று தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது வித்தியாசமானத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதில் தென்ஆப்பிரிக்காவின் ஈடுபாடு குறிப்பிட்ட தகுந்த வகையில் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான புத்துணர்ச்சிதான் சாம்பியன்ஷிப். தென்ஆப்பிரிக்கா வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என்று சொல்லும். அந்த வகையில் எங்களுக்கு சாம்பியன்ஷிப் தொடர் கடினமாக தொடங்கப் போகிறது. இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா அணி அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறையின் கீழ் வருகிறது. முதல் தொடரே இந்திய மண்ணில் என்பது கடினமானது என்று தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏதாவது வித்தியாசமானத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதில் தென்ஆப்பிரிக்காவின் ஈடுபாடு குறிப்பிட்ட தகுந்த வகையில் இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான புத்துணர்ச்சிதான் சாம்பியன்ஷிப். தென்ஆப்பிரிக்கா வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என்று சொல்லும். அந்த வகையில் எங்களுக்கு சாம்பியன்ஷிப் தொடர் கடினமாக தொடங்கப் போகிறது. இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X