search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகதீசன்
    X
    ஜெகதீசன்

    டிஎன்பிஎல்: காரைக்குடி அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

    டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்ற்றி பெற்றது.
    திருநெல்வேலி:

    தமிழ்நாடு கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா மற்றும் சூர்ய பிரகாஷ் களமிறங்கினர்.

    சூர்ய பிரகாஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 59 பந்துகளில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் திண்டுக்கல் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

    திண்டுக்கல் அணி தரப்பில் ரோகித் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    ஹரி நிஷாந்த்
    இதையடுத்து, 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் காரைக்குடி வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினர். ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் விளாசினார். மேலும் ஜெகதீசன் 47 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் அடித்தார்.

    இதனால் திண்டுக்கல் அணி 17 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் அடித்து காரைக்குடி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×