என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகமது அமிரின் டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது: சோயிப் அக்தர்
Byமாலை மலர்28 July 2019 2:51 PM GMT (Updated: 28 July 2019 2:51 PM GMT)
27 வயதில் முகமது அமிரின் டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 27 வயதில் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்தபோது முன்னாள் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில் அமிரின் ஓய்வு முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது அமிர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது முற்றிலும் ஏமாற்றமாக உள்ளது.
இந்த நேரம் பாகிஸ்தான் அணிக்கு அமிர் திரும்ப செலுத்த வேண்டிய நேரம். தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அமிர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் காயத்தில் இருந்தபோதிலும் கூட பாகிஸ்தான் அணி இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் தொடரை கைப்பற்ற உதவியாக இருந்தேன்.
பாகிஸ்தான் அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் 27 வயதில் எப்படி ஓய்வு பெற முடியும்?. மேட்ச் பிக்சிங் விவாரத்தில் இருந்து அவரை மீட்டு மீண்டும் தேசிய அணியில் சேர்க்க பாகிஸ்தான் அணி பாடுபட்டது. தற்போது அவர் சூப்பர் பார்மில் உள்ளார். ஆனால் ஓய்வு பெற்றுவிட்டார்.
அமிரைத் தொடர்ந்து ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகியோர் ஓய்வு முடிவை எடுப்பார்கள்’’ என்றார்.
இந்நிலையில் அமிரின் ஓய்வு முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முகமது அமிர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது முற்றிலும் ஏமாற்றமாக உள்ளது.
இந்த நேரம் பாகிஸ்தான் அணிக்கு அமிர் திரும்ப செலுத்த வேண்டிய நேரம். தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அமிர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் காயத்தில் இருந்தபோதிலும் கூட பாகிஸ்தான் அணி இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் தொடரை கைப்பற்ற உதவியாக இருந்தேன்.
பாகிஸ்தான் அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் 27 வயதில் எப்படி ஓய்வு பெற முடியும்?. மேட்ச் பிக்சிங் விவாரத்தில் இருந்து அவரை மீட்டு மீண்டும் தேசிய அணியில் சேர்க்க பாகிஸ்தான் அணி பாடுபட்டது. தற்போது அவர் சூப்பர் பார்மில் உள்ளார். ஆனால் ஓய்வு பெற்றுவிட்டார்.
அமிரைத் தொடர்ந்து ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகியோர் ஓய்வு முடிவை எடுப்பார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X