என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்
Byமாலை மலர்27 July 2019 4:10 PM GMT (Updated: 27 July 2019 4:10 PM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 11-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ் அணி.
திருநெல்வேலி:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் களமிறங்கினர்.
முகுந்த் 5 ரன்னிலும், ஷாருக்கான் 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ரன்ஞன் பால் உடன் ஜோடி சேர்ந்த ரங்கராஜன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரன்ஞன் பால் 34 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான ரங்கராஜன் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அந்தோனி தாஸ் 13 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 32 ரன்கள் விளாசினார்.
இறுதியில் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
திருச்சி வாரியர்ஸ் அணி தரப்பில் விக்னேஷ் மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X