search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர்.
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர்.

    டிஎன்பில் கிரிக்கெட் காரைக்குடி காளைக்கு எதிரான போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி

    திண்டுக்கல்லில் நடைபெற்ற டிஎன்பில் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    காரைக்குடி காளை - காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 7-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, முகிலேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகிலேஷ் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து விஷால் உடன் சஞ்சய் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக சஞ்சய் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விஷால் 27 ரன்னில் ஆட்டமிழக்க சஞ்சய் யாதவ் 32 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து வந்த அபரஜித் 19 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஆர் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சஞ்சய் சதத்தை நோக்கி சென்றார்.

    ஆனால் 95 ரன்கள் எடுத்த நிலையில் சஞ்சய் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். சதீஷ் 13 பந்தில் 28 ரன்கள் விளாச காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.

    பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தொடங்கியது. எதிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் காரைக்குடி அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் ராஜகோபால் சதிஷ் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Next Story
    ×