search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபிநாத்
    X
    கோபிநாத்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற 149 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
    நெல்லை:

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 6-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தியும், கங்கா ஸ்ரீதர் ராஜுவும் இறங்கினர்.

    ஒரு ரன் எடுத்த நிலையில் கவுசிக் காந்தி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய கோபிநாத், ராஜுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் 50 ரன் சேர்த்தனர். கோபிநாத் 37 ரன்னிலும், ராஜு 26 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முருகன் அஷ்வின் 18 ரன்னிலும், சசிதேவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹரிஷ் குமார் அதிரடியாக ஆடி 23 பந்தில் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 148 ரன்களை எடுத்தது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சவரணகுமார் 2 விக்கெட்டும், விக்னேஷ், பொய்யாமொழி, சாய் கிஷோர், கண்ணன் விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×