என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர்: வெற்றிடமான 4-வது இடத்தை பூர்த்தி செய்வார்களா?
Byமாலை மலர்21 July 2019 10:52 AM GMT (Updated: 21 July 2019 10:52 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைவதற்கு 4-வது வரிசையில களம் இறங்கி பேட்டிங் செய்வதற்கு நிரந்தரமான வீரர் இல்லாததுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. ஆட்டத்திற்கு ஏற்ப நான்காவது வரிசையில் ஏதாவது ஒரு வீரரை பேட்டிங் செய்ய வைக்கிறார்கள்.
இதனால் 2023 உலகக்கோப்பையை மனதில் கொண்டு அந்த இடத்திற்கு சரியான வீரர்ரை தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், 29 வயதான மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதேபோல் மின்னல் வேகத்தில் பீல்டிங் செய்யும் திறமை படைத்தவர்கள். குறிப்பாக மணிஷ் பாண்டே அவுட் பீல்டிங் அசத்தக்கூடியவர்.
இருவரில் யாராவது ஓருவர் 4-வது இடத்திற்கு சரியான நபராக திகழ்வார்களா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைவதற்கு 4-வது வரிசையில களம் இறங்கி பேட்டிங் செய்வதற்கு நிரந்தரமான வீரர் இல்லாததுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. ஆட்டத்திற்கு ஏற்ப நான்காவது வரிசையில் ஏதாவது ஒரு வீரரை பேட்டிங் செய்ய வைக்கிறார்கள்.
இதனால் 2023 உலகக்கோப்பையை மனதில் கொண்டு அந்த இடத்திற்கு சரியான வீரர்ரை தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், 29 வயதான மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். அதேபோல் மின்னல் வேகத்தில் பீல்டிங் செய்யும் திறமை படைத்தவர்கள். குறிப்பாக மணிஷ் பாண்டே அவுட் பீல்டிங் அசத்தக்கூடியவர்.
இருவரில் யாராவது ஓருவர் 4-வது இடத்திற்கு சரியான நபராக திகழ்வார்களா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X