search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை வீரர் அருண் கார்த்திக்
    X
    மதுரை வீரர் அருண் கார்த்திக்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர் கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் ஸ்ரீனிவாசன் மற்றும் விக்டர் களமிறங்கினர். விக்டர் 1 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் சிவா 28 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரீனிவாசன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் தரப்பில் அந்த அணியின் கிரன் மற்றும் மிதுன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.     

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். சரத் ராஜ் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக ஆடிய கார்த்திக் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் விளாசினார். இறுதியில் மதுரை அணி 12.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 128 ரன்களை எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
    Next Story
    ×