search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்

    திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று இரவு திண்டுக்கல்லில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரி நிஷாந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெகதீசன் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    அஸ்வின்

    ஜெகதீசன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சதுர்வேத் அஸ்வினுக்கு சப்போர்ட் ஆக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அஸ்வின் 19 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அப்போது திண்டுக்கல் 8.4 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது.

    அஸ்வின் ஆட்டமிழந்ததும் அத்துடன் திண்டுக்கல்லின் ஸ்கோர் உயர்வில் தொய்வு ஏற்பட்டது. 15.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சேப்பாக் கில்லீஸ் அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேப்பாக் அணி சார்பில்  அலெக்சாண்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×