என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்னுக்குத் தள்ளி பெய்லிஸை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
Byமாலை மலர்19 July 2019 12:10 PM GMT (Updated: 19 July 2019 12:10 PM GMT)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் டிரேவொர் பெய்லிஸை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 8 அணிகளில் ஒன்றான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரது பயிற்சியின் கீழ் அந்த அணி 2016-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்த ஆண்டில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறினாலும், 4-வது இடத்தையே பிடித்தது. இந்த நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர பேச்சுவார்த்தை அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டாம் மூடி விலகி இருக்கிறார்.
பெய்லிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012 முதல் 2015 வரை இருந்துள்ளார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி சிக்சர்ஸ் அணி வாகை சூடியது. அவரது வெற்றிகரமான பயணம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியையும் முன்னெடுத்து செல்லும் என்று நம்புவதாக ஐதராபாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கல்லீஸ் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பெய்லிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி ஆர்வம் காட்டி வந்தது. அதற்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டது.
இந்த ஆண்டில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறினாலும், 4-வது இடத்தையே பிடித்தது. இந்த நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து பரஸ்பர பேச்சுவார்த்தை அடிப்படையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டாம் மூடி விலகி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரேவொர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவார். ஆஷஸ் தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்து அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.
பெய்லிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2012 முதல் 2015 வரை இருந்துள்ளார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் சிட்னி சிக்சர்ஸ் அணி வாகை சூடியது. அவரது வெற்றிகரமான பயணம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியையும் முன்னெடுத்து செல்லும் என்று நம்புவதாக ஐதராபாத் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கல்லீஸ் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பெய்லிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி ஆர்வம் காட்டி வந்தது. அதற்குள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X